இந்து மதம் காலம் கடந்து நிற்கும் ஒரு அற்புதக் கருவூலமாகும். எண்ணிக்கணிக்க முடியாத பல்வேறு அற்புதங்களும், அதிசயங்களும், உண்மைகளும் நிறைந்து கிடக்கின்றன. இதில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லிலும் உலகின் இயக்கமே உள்ளடங்கியிருக்கின்றது. இன்றைய காலத்தில் உலகின் மிகப்பெரும் ஆள்சக்தியாக விளங்கும், ‘அறிவியல் விஞ்ஞானம்’ இற்றைக்கு சுமார் 3நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே தோன்றியதாகும். பல்வேறு புதுமைகள் படைத்து, மனிதனின் செயற்பாட்டில் தன்னையும் உள்நுழைத்து அரிய பலவற்றையும் செய்து வருகின்றது. இத்தகைய விஞ்ஞானமும், மேலைத்தேய அறிவியலும் தோன்றிய காலகட்டத்திற்கு ‘எத்தனையோ மடங்கு காலத்திற்கு முன்பே’ தோன்றிவிட்ட இந்துமத சிந்தனைகள், நவீன விஞ்ஞான அறிவியல் கூறாத எத்தனையோ விடயங்களை எண்ணிக்கூடப் பார்க்க முடியாத அளவில் கூறிவிட்டுள்ளமை என்பது யாவரும் அறிந்ததுவே. இறைவனையே முதற்பொருளாகவும் அனைத்துமாகவும் கொண்டு கூறும் இந்து மதத்தின் கோட்பாடுகளில், அணுவை காரணம் காட்டி விளக்கங்களை முன்வைக்கும் விஞ்ஞானத்தின் அத்தனை அம்சங்களுமே அடங்கிவிடுகின்றன என்பது நிதர்சனம்.
உள்ளிருக்கும் சிவமாகிய ஜீவனுடன் பேராற்றல் ஆகிய சக்தி சேர்ந்தால் தான் இயக்கம் நடக்கும். அதாவது, “சக்தி இன்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை” என்பர். அந்த சக்தி இயங்குவதற்கு அதாவது, பஞ்ச பூதங்களாலாய இந்த உடல் இங்குவதற்கு அதை தானாக நின்று இயக்கும் ஒரு இயக்கி – சிவன் தேவை. அதாவது, சீவன் தேவை. இந்த உடல் அழிந்தவுடன் அல்லது இல்லை என்றவுடன் உள்ளிருக்கும் சீவனை அல்லது ஆன்மாவை நாம் காண்பது என்பதோ அல்லது அந்த ஆன்மா இயங்குவது என்பதோ கிடையாது. அவ்வாறே, இந்த சிவனும், சக்தியற்ற நிலையில் வெறும் இருப்பாய் மாத்திரம் இருக்கும். அதுபோன்றே, சீவனற்ற உடல் - உயிரற்ற உடல், சடம் எனப்பெறும். அதுவரை பல பெயர்களால் குறிப்பிடப்பட்டு வந்தது, உயிரற்ற மாத்திரத்திலேயே ‘பிணம்’ என்றும், ‘சவம்’ என்றும் அஃறிணைப் பொருளில் வழங்கப்பெறும். சக்தியும் சிவனற்ற நிலையில் வெறும் சடமாகிவிடும். எனவே, சவத்தைச் சிவமாக்க ஒரு விசிறி தேவை போல், இந்த மனிதப் பிறவியில் நாம் செய்யும் கர்மங்களும், எமது வினைகளும் அவற்றிற்கான பயன்களும் எம்மைச் சிவமாக்கவும், அல்லது சவமாக்கவும் கூடும் என்பதை உணர்ந்து, இவற்றையும், இவற்றிற்கான நெறிகளையும் தெளிவுபடுத்தியோராக சித்தர்பெருமான்கள் விளங்குகின்றனர்.
மேலை அறிவியல், எந்தவொன்றினதும் இயக்கத்திற்கு ‘சக்தி’ – Power என்ற ஒன்றை அடிப்படையாகக் காட்டுகின்றது. நிலைச்சக்தி, இயக்கசக்தி என்பவற்றின் அடிப்படையில் ஒரு பொருளின் இயக்கம், வேகம், தன்மை என்பவற்றை கணிக்கும் போது, அங்கு அப் பொருளின் தன்மை, திணிவு, புவியீர்ப்பு, நேரம், பிரயோகிக்கப்படும் விசை முதலிய பல விடயங்கள் பற்றிப் பேசப்படுவதைக் காணலாம். எனவே, இவ்விரு துறைகளிலும் அதாவது, இந்து மெய்யியலிலும், மேலைத்தேய அறிவியலிலும் கூறப்படுகின்ற இயக்கம் பற்றிய செய்திகளின் அடிப்படை வாயிலாக பல்வேறு தொடர்புகள் இருப்பதனைக் காணமுடிகின்றது.
இறைவனை அறிவே உருவானவன், ஜோதி வடிவானவன், ஆயிரம் சூரியனிலும் பிரகாசம் மிக்கவன்…என்று பலவாறாகச் சிறப்பிக்கப்படுகின்றான். விஞ்ஞானம் இப் பிரபஞ்ச இயக்க சக்தியை மின்சாரம், வெப்பம், ஒளி, ஒலி என்றும் பலவாறாகக் கூறுகின்றது. அதாவது, ஒரு சக்தியின் அலை நீளத்தைப் பொறுத்து அதனுடைய அதிர்வெண்ணை நிர்ணயிக்கின்றது. இவ் அதிர்வெண் மாறுபடும்போது அச் சக்தியின் பண்புகளும், தன்மையும் மாறுபடுகின்றது. இதுபோன்றே இறைவனும் உயிர்களின் தன்மைக்கேற்ப, அவற்றின் வினைப் பயன்களுக்கேற்ப தணு, கரண, புவன, போகங்களைப் படைக்கின்றான். விஞ்ஞானம் கூறும் அணு என்பது எங்கும் நிறைந்தது. இந்தப் பொருளில் இருக்கும், இதில் இருக்காது என்று கூறிவிட முடியாது. ஆக்க முடியாதது. அழிக்கவும் முடியாதது. ஆனால், இன்னொன்றாக மாற்றிவிட கூடியது. இறைவனோ, காணுமிடமெங்கினும் நீக்கமற நிறைந்து நிற்பவன். பிறப்பும், இறப்பும், கூடவே மூப்பும் அற்றவன். அனைத்தையும் படைத்து, காத்து இறுதியில் தன்னுள்ளே அனைத்தையும் ஒடுக்கிக் கொள்பவனும், அழிப்பவனும் அவனே. அவனை தூணிலும், துரும்பிலும் காணலாம். பெரியவற்றுள் எல்லாம் பெரியவன், சிறியவற்றுள் எல்லாம் சிறியவன்.
இத்தகைய நிலையில் விந்தைகள் நிறைந்த உடம்பினுள் நிறைந்த நின்று அவ்வுடலை இயக்குவது எது என்ற வினா எழுவது இயல்பு. மெய்ஞானமோ இதற்கு சீவன் - ஆன்மா என்று பதில் தர விஞ்ஞானமோ இன்னமும் சரியான பதிலைத் தரமுடியாது சமாளித்துக் கொண்டிருக்கின்றது. ஒட்சிசன் வாயுவே உயிர்வாழ்வதற்கு அடிப்படை என்கின்றது. அந்த உயிர் எதனால் ஆனது என்பதற்கு பதில் விஞ்ஞானத்திடம் இல்லை. கண்ணால் காணவும், காதால் கோட்கவும், தொட்டு உணரவும் முடியாத பிரம்மமே சீவன்களாகத் தோற்றுகின்றார் எனும் மெய்ஞானத்தின் விளக்கத்தையும் உறுதியாய் ஏற்கும் தன்மையும் இல்லை. இவ்வாறு இருக்க, இந்த உயிர்ச்சக்தியை உலகின் கண் வாழும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தும், அறிந்தும் வைத்திருந்துள்ளனர். தத்தம் அறிவுக்கும், மொழிக்குமேற்ப பல்வேறு பெயர்களைச் சூட்டி இவற்றை அழைத்தனர். இந்துக்கள் அனைவரும் சிவம், பிராணன், சீவன் என்றும், எகிப்தியர்கள் ‘கா’ என்றும், சீனர்கள் ‘ஹீ’ என்றும், கிரேக்கர்களும் ரோமர்களும் ‘ஈதர்’ என்றும் பலவாறாக அழைக்கின்றனர். அதுபோலவே, ஜெர்மன் நாட்டு அறிஞர் ஹானிமன் ‘ஆதார சக்தி’ என்றும், டாக்டர். மெஸ்மர் (மெஸ்மரிசத்தை கண்டுபிடித்தவர்) ‘விலங்குகளின் காந்த சக்தி’ என்றும், இது பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் ரஷ்ய விஞ்ஞானிகள் ‘பயோ பிளாஸ்மிக் எனர்ஜி’ (Bio Plasmic Energy) என்றும் அழைக்கின்றனர். இவை தவிர, இதற்கு ‘எல்-பீல்டு’, ‘விட்டல் எனர்ஜி’, ‘பிளாஸ்மிக் எனர்ஜி’ எனவும் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு எத்தனையோ பெயர்களில் எத்தனை பேர் கூறினாலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பேயே எமது இந்து மதத்தின் வழித்தோன்றல்களாக வந்த சித்தர்களும், ஞானியர்கள், ரிஷிகள் முதலிளோர் பலர் தமது அனுபவ ஞனத்தினாலும், ஆன்ம சாதனையினாலும், புற உலகினைக் கடந்து – அக உலகிட் புகுந்து எண்ணரிய பல அற்புத விடயங்களை அறிந்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை பிறர்க்கும் பயன்படும் வண்ணம் வெளிப்படுத்தியும் சென்றிருக்கின்றார்கள்.
மனித உடலில் காணப்படும்
01. மூலாதாரம்
02. சுவாதிஸ்டானம்
03. மணிபூரகம்
04. அனாஹதம்
05. விசுத்தி
06. ஆக்ஞை
எனும் ஆறுடன்
07. சகஸ்ராதாரம்
என இவ் ஏழு ஆதாரங்களைப் பற்றிப் பேசாது எந்தவொரு ஞானியரும் தம் மொழி உரைத்ததில்லை.
குண்டலினி யோகம் எனும் ஓர் அற்புதக் கலையினை ஊற்றெடுக்கச் செய்வதற்கு அடிப்படைகளாகவும், ஆதாரமாகவும் அமைவது இவ் ஆதாரங்களே எனலாம். திருமூலரின் திருமந்திரத்தில் இவற்றை மேலும் விரிவாகக் காணலாம்.
குண்டலினி எனும் சக்தி முள்ளந்தண்டுப்பகுதியில் தலைகீழான பாம்பு வடிவில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. இதை ஆன்ம சாதனைகளின் மூலம் எழுப்புவதால் அரிய பல சக்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும், சித்துக்கள் பலவும் சித்தியாகும், அட்டமா சித்திகளும் வசமாகும். இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஆதாரங்களும் அவற்றுடன் ஆயிரம் இதழ் தாமரையாக விளங்கும் சகஸ்ரதளத்துடன் சேர்த்து ஏழு ஆதாரங்களையும் பற்றி நோக்கும் போது, இவற்றோடு மருத்துவ ரீதியில் எத்தகைய தன்மைகள் காணப்படுகின்றன என்பதை மேற்கொண்டு நோக்கலாம்.
ஆறாதாரங்கள் |
மனித உடலில் காணப்படும்
01. மூலாதாரம்
02. சுவாதிஸ்டானம்
03. மணிபூரகம்
04. அனாஹதம்
05. விசுத்தி
06. ஆக்ஞை
எனும் ஆறுடன்
07. சகஸ்ராதாரம்
என இவ் ஏழு ஆதாரங்களைப் பற்றிப் பேசாது எந்தவொரு ஞானியரும் தம் மொழி உரைத்ததில்லை.
குண்டலினி யோகம் எனும் ஓர் அற்புதக் கலையினை ஊற்றெடுக்கச் செய்வதற்கு அடிப்படைகளாகவும், ஆதாரமாகவும் அமைவது இவ் ஆதாரங்களே எனலாம். திருமூலரின் திருமந்திரத்தில் இவற்றை மேலும் விரிவாகக் காணலாம்.
குண்டலினி எனும் சக்தி முள்ளந்தண்டுப்பகுதியில் தலைகீழான பாம்பு வடிவில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. இதை ஆன்ம சாதனைகளின் மூலம் எழுப்புவதால் அரிய பல சக்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும், சித்துக்கள் பலவும் சித்தியாகும், அட்டமா சித்திகளும் வசமாகும். இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஆதாரங்களும் அவற்றுடன் ஆயிரம் இதழ் தாமரையாக விளங்கும் சகஸ்ரதளத்துடன் சேர்த்து ஏழு ஆதாரங்களையும் பற்றி நோக்கும் போது, இவற்றோடு மருத்துவ ரீதியில் எத்தகைய தன்மைகள் காணப்படுகின்றன என்பதை மேற்கொண்டு நோக்கலாம்.
மனித உடலில் எண்ணற்ற சக்தி மையங்கள் காணப்படுகின்றன. இவை பிராணனின் சக்தியைச் சேமித்து வைத்து தேவைக்கேற்ப வழங்குகின்றன. இவற்றுள் மிக முக்கியமானவையாகக் கூறப்படுவதே மேற்சொன்ன ஏழு ஆதாரங்களுமாகும். சக்கரங்கள் என்றும் சொல்லப்படும் இவை, உடலில் கீழிருந்து மேலாக ஒழுங்கில் அமைந்துள்ளன. அதாவது, இடங்கலை, பிங்கலை எனும் இடது (சந்திர நாடி), வலது (சூரிய நாடி) நாடிகள் தண்டுவடத்தை குறுக்காக சந்திக்கும் 6 இடங்களில் இவை அமைந்துள்ளன. முள்ளந்தண்டின் அந்தப் பகுதி, அடிவயிறு, தொப்பூழ், மார்பு, தொண்டைக்குழி, நெற்றிப்பொட்டு என்பவற்றின் நேர்பின்புறமாக முள்ளந்தண்டிலும், ஏழாவது ஆதாரம் மூளையின் மேல்நடுவில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்போலவும் விளங்குகின்றது. இச் சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நாளமில்லா சுரப்பிகளுடன் இணைப்புடையதாய் விளங்குகின்றது. ஒவ்வொன்றும், அது அமைந்துள்ள பகுதியில் உள்ள உள்ளுறுப்புகளோடு தொடர்புகொண்டுள்ளது. இத்தகைய சக்கரங்களில் ஏற்படுகின்ற கோளாறுகள், தடைகள் என்பனவே உடலிலும், உள்ளிலும் ஏற்படுகின்ற நோய்களுக்கும், மற்றபிற பாதிப்புகளுக்கும் காரணமாக அமைகின்றது. இத்தகைய தன்மையைத் தவிர்த்து, நோய்களிலிருந்தும், பாதிப்புக்களிலிருந்தும் நீங்கி உடலையும் உறுப்புக்களையும் சிறப்பாகச் செயற்படச் செய்ய இயமம், நியமம், பிராணாயாமம்… முதலிய அட்டாங்க யோகங்களும் சிறப்பாக யோகாசனம், தியானம் என்பவையும் கொள்ளப்படுகின்றன. இவை, இச் சக்கரங்களை சீராக இயக்கவும், தூண்டிவிடவும் மிகுந்த பயன்பெறுகின்றன.
நவீன மருத்துவத்தில் கூறப்படுகின்ற பல்வேறு உடற்குறைபாடுகளிற்கு இச் சக்கரங்கள் காரணமாக அமைகின்றன என்பது ஆன்மீக ஆராய்ச்சியின் பால் வெளிவந்த உண்மையாகும். இந்த சக்கரங்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பை இந்து சமயம் தெளிவாகக் காட்டி அக்கிரகங்களின் இயக்கத்தோடு இவ் ஆதாரங்களை அவற்றின் இயக்கங்களை விரித்துரைக்கின்றது. ஒவ்வொரு ஆதாரங்களும் வானவில்லில் குறிப்பிடப்படுகின்ற ஒவ்வொரு நிறங்களை தம்முடையதாகக் கொண்டு விளங்குகின்றன.
01. மூலாதாரம், இது செவ்வாய் கிரகத்தால் இயக்கப்படுவது. சிவப்பு நிறமுடையது. தண்டுவடம், சிறுநீரகம், ஆகிய உறுப்புக்களை இதுவே செயற்படுத்துவது. அதிரினல் எனப்படும் நாளமில்லாச் சுரப்பியை இயக்குவதுடன் தான் பாதிக்கப்பெறும் போது முதுகு, தண்டுவட நோய்கள், அதிரினல் சுரப்பி நோய்கள் என்பவற்றை ஏற்படுத்துகின்றது.
02. சுவாதிஸ்டானம், இதை புதன் இயக்குகிறது. செம்மஞ்சள் நிறமுடையது. இனப்பெருக்க உறுப்புகளுடன் அதனோடு தொடர்புடைய நாளமில்லாச் சுரப்பிகளையும் இச்சக்கரம் இயக்குகின்றது. இதனில் ஏற்படும் பாதிப்பால் பாலியல் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுகின்றது.
03. மணிபூரகம், சூரியனின் இயக்கத்திற்கு உட்பட்ட இது மஞ்சள் நிறமானது. கல்லீரல், மண்ணீரல், நரம்பு மண்டலம் என்பவற்றையும், கணையம் எனும் நாளமில்லாச் சுரப்பியையும் கட்டுப்படுத்துவதுடன், இவை தொடர்பான குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றது.
04. அனாஹதம், சுக்கிரனின் இயக்கத்திற்கு உட்பட்ட இச் சக்கரம் பச்சை நிறமுடையது. இரத்தம், இரத்த ஓட்ட மண்டலம், போன்றவற்றையும், தைமஸ் எனும் நாளமில்லாச் சுரப்பியையும் கட்டுப்படுத்துவதுடன,; இவற்றின் பாதிப்புக்களையும் தோற்றிவிக்கின்றது.
05. விசுத்தி, இதற்கான கிரகம் வியாழன். இதன் நிறம் நீலம். மூச்சுக்குழல், குரல்நாண், நுரையீரல், வயிறு, குடல் ஆகியவை இதனால் இயக்கப்படுகின்றன. தைராய்டு எனும் சுரப்பியும் இதனுடன் இணைகின்றது. இவற்றின் பாதிப்புக்களுக்கும் காரணமாக அமைகின்றது.
06. ஆக்ஞை, சனிக்கிரகத்திpன் இயக்கத்திற்கு உட்பட்ட இது கருநீல நிறமுடையது. இடதுகண். மூக்கு, காதுகள், நரம்பு மண்டலம். ஆகியவற்றையும் பிட்யூட்டரி சுரப்பியையும் கட்டுப்படுத்துவதோடு, அவற்றில் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றது.
07. சகஸ்ராதாரம், கேதுவின் இயக்கத்திற்கு உட்பட்ட இச்சக்ரம் ஊதா நிறமுடையது. மூளையின் மேற்பகுதி, வலது கண் ஆகியவற்றையும் பீனியல் எனும் சுரப்பியையும் கட்டுப்படுத்துகின்றது.
இவ்வாறான ஏழு ஆதாரங்களுடன் எமது புருவத்தின் மத்தியில் ‘மூன்றாவது கண்’ என்றழைக்கப்படும் சோமச் சக்கரம் காணப்படுகின்றது. இது இராகுவினால் இயக்கப்படுவது.
சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் காணப்பட்ட போதிலும், அவை அனைத்தும் ஒன்றாய் இணைந்து விளங்குவதைப்போல, மனித உடலில் காணப்படும் இவ் ஆதாரங்கள் அனைத்தும், வெவ்வேறாகக் காணப்பட்ட போதிலும், அவை அனைத்தும் ஒன்றித்து இணைவதே உத்தமமான செயற்பாட்டினைக் காட்டுவதாக அமைகின்றது.